18 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் பிரபுதேவா. ஒரு கட்டத்தில் பிரபு தேவா டான்ஸ்மாஸ்டராக இருந்து நடிகராக மாறி இயக்குனராகவும் மாறினார். தமிழில் மட்டுமல்ல ஹிந்தியிலும் பெரிய இயக்குனரானார்.
இந்த நிலையில் பிரபுதேவா பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடிக்கிறார். இதே பெயரில் 1983ம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு படம் வந்திருக்கிறது.
அதே பெயரில் இப்போது பொய்க்கால் குதிரை படம் தயாராகி வருகிறது.
இப்படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் படங்களை இயக்கியவர் ஆவார்.
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் நாயகியாக நடிக்கிறார். பிரபு தேவா இப்படத்தில் ஒற்றைக்காலுடன் நடிப்பதுதான் விசேஷம்.







