சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகலாய்வு பணிகள் நடந்து வருகிறது. தமிழர்களின் தொன்மையான விசயங்கள் இங்கு பலவும் தினசரி கிடைத்து வருகிறது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்த ஆராய்ச்சி தேவையற்றது என துக்ளக் இதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இதை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டித்துள்ளார்.
தமிழ் பண்பாட்டின் தொன்மையை அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை அவர்களுக்கு வயிறு எரிகிறது என அமைச்சர் கூறியுள்ளார்.













