சிறுவயதில் இருந்தே மிக அமைதியானவர் சூர்யா. அவரின் சகோதரர் நடிகர் கார்த்தியும் அவரது தங்கை பிருந்தாவும் பயங்கர சேட்டை செய்வார்களாம். இவர் மட்டும் அதிக சேட்டைகள் எல்லாம் செய்யமாட்டாராம்.
கார்த்தியை அதிகம் பேர் அவர்கள் வீட்டில் விரும்பியதால் சூர்யாவுக்கு இன்பீரியார்ட்டி காம்ப்ளக்ஸ் கொஞ்சம் சிறுவயதில் இருந்ததாம். அதனால் வேண்டுமென்றே கார்த்தியை பயப்படவைக்க வேண்டும் என கொடூரமாக வேடமிட்டு இரவில் தூங்கிக்கொண்டு இருக்கும் கார்த்தி மீது உட்கார்ந்து தட்டி எழுப்பி பயப்படவைப்பாராம். சிறுவர்களுக்கே உரிய அண்ணன் தம்பி சண்டை இருவருக்கும் இருந்ததாம்.தம்பி கார்த்தியை சிறு வயதில் மிகவும் வெறுப்பாராம் சூர்யா.
சில வருடம் ஆன பிறகு கார்த்தி அமெரிக்காவுக்கு படிக்க சென்றபோது சூர்யா தம்பி பிரிந்திருக்க வேண்டியது என்பதால் மிகவும் மனம் உடைந்து போனாராம். இமெயில் எல்லாம் அப்போதான் வந்த நேரம் என்பதால் ஈமெயில் அனுப்பி நலம் விசாரிப்பாராம்.
இதை அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.









