---Advertisement---

திருநாவுக்கரசு வீட்டில் சோதனை; லேப்டாப், பென்ட்ரைவ் பறிமுதல்

By Sri
Published on: March 15, 2019
Pollachi sex abuse case
---Advertisement---

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணமான லேப்டப் மற்றும் பென்ட்ரைவ் சிக்கியது.
பொள்ளாச்சியில், முகநூல் மூலம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த கும்பளை சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதையடுத்து, நேற்று மதியம் 3 மணியளவில், திருநாவுக்கரசின் மாக்கினாம்பட்டியில் உள்ள வீட்டில் ஆய்வு செய்தனர். சுமார் இரவு 7 மணிவரை நடந்த, இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களான லேப்டப் மற்றும் பென்ட்ரைவ் கிடைத்துள்ளது.

இது மட்டுமின்றி, பொள்ளாச்சி சுற்று வட்டாரத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், திருநாவுக்கரசு நண்பர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.