வாக்குச்சாவடி ஸ்லிப் என்ற ஸ்லிப்பை வைத்துதான் அனைத்து வாக்குசாவடிகளிலும் ஓட்டுப்போட முடியும். இந்த வாக்குச்சாவடி ஸ்லிப்பை கொடுப்பதற்கு சத்துணவு பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் என நியமிக்கப்பட்டிருப்பர்.
இந்த பணி சரியாக நடக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடாவுக்காக இந்த பூத் ஸ்லிப் விநியோகத்தில் தலையிடுவதாகவும் ஆங்காங்கே பரவலாக புகார்கள் எழுந்துள்ளன.
வீடு வீடாக சென்று முறையாக பணி நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.













