ஒன்று எங்கள் ஜாதியே என்ற பழைய பாடலில் ஆதி மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான் நேற்று மனிதன் வானில் இறங்கி தேரை ஓட்டினான் இன்று மனிதன் வெண்ணிலாவில் முகத்தை தேடினான் வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான் என்ற வரிகள் வரும்.
அந்த வரிகளில் வந்தது போலவே அனைத்து விஞ்ஞான முன்னேற்றங்களும் நாளுக்கு நாள் வந்துகொண்டேதான் இருக்கிறது.
நிலவுக்கு முதன் முதலில் சென்று வந்த பிறகு விண்வெளியில் எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்தாகிவிட்டது.
தற்போது விண்வெளியில் பார், தியேட்டர் உள்ளிட்டவைகள் வைத்து அமெரிக்கா புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது 2025ல் இதன் பணிகள் முடிந்த உடன் அமெரிக்காவின் நாசா விண்வெளிமையத்திற்கு இந்த இடம் விற்கப்படுமாம்.
அதன் பிறகு 2027ல் இருந்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களாம்.













