நேற்று பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை வந்த மோடி வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயிலை துவக்கி வைத்தார்.
பிரதமர் துவக்கி வைத்த ரயில் இன்று முதல் முறைப்படி ஓட துவங்கியது. அதன்படி வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் இன்று ஓடத்துவங்கியது.
ரீனா என்ற பெண் ஓட்டுநர் ரயிலை இயக்கினார்.













