நயன் தாரா தற்போது நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை இவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இப்படத்தை இயக்குவது மிலிந்த் ராவ் என்ற இயக்குனர். இவர் சித்தார்த் ஆண்ட்ரியா நடிப்பில் அவள் என்ற படத்தை இயக்கியவர் ஆவார்.
இப்படம் கொரிய மொழி படமான ப்ளைண்ட் என்ற படத்தின் ரீமேக் என்று சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது விரைவில் படம் வரும் நயன் தாராவுக்கு இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நயன்தாரா இதில் பார்வையற்றவராக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








