இந்தியத் திரையுலகின் வரலாற்றை ‘பாகுபலிக்கு முன், பாகுபலிக்குப் பின்’ என இரண்டாகப் பிரிக்கலாம். அந்த அளவுக்குப் பிரம்மாண்டத்திற்கும், வசூல் சாதனைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த ‘பாகுபலி 2: தி கன்க்ளூஷன்’ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் (ஏப்ரல் 28, 2026) ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் வியர்வையிலும், உழைப்பிலும் உருவான இந்தப் படம், 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 28-ஆம் தேதி-ல் வெளியாகி உலகெங்கும் உள்ள ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார்?” (Why Kattappa Killed Baahubali?) என்ற ஒற்றைக் கேள்விக்கான விடையைத் தேடி ஒட்டுமொத்த இந்தியாவையுமே தியேட்டருக்கு வரவழைத்த பெருமை இந்தப் படத்தையே சாரும்.

பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை: இந்திய சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையை பாகுபலி 2 படைத்தது. ஒட்டுமொத்தமாக உலகளவில் சுமார் 1800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, இந்திய சினிமாவால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தது. குறிப்பாக, வட இந்தியச் சந்தையில் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம், இன்று வரை பல ‘பான் இந்தியா’ படங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
நட்சத்திரங்களின் உழைப்பு: பாகுபலி கதாபாத்திரத்திற்காகத் தனது ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த நடிகர் பிரபாஸ், இந்திய அளவில் ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். பல்வாள் தேவனாகத் மிரட்டிய ராணா டகுபதி, கம்பீரமான தேவசேனாவாக அனுஷ்கா ஷெட்டி, ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் விசுவாசமான கட்டப்பாவாக சத்யராஜ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளன.

தொழில்நுட்பப் புரட்சி: எம்.எம். கீரவாணியின் ஆன்மாவை உருக்கும் இசை மற்றும் வி.எப்.எக்ஸ் (VFX) காட்சிகளில் ராஜமௌலி காட்டிய துல்லியம், இந்தப் படத்தை ஒரு சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தியது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான போர்க்களக் காட்சிகளை இந்தியத் திரையில் கண்டு ரசிகர்கள் வியந்தனர்.
‘பாகுபலி 2: தி கன்க்ளூஷன்’ (Bahubali 2 – The Conclusion) ஒன்பது ஆண்டுகள் கடந்தாலும், ‘பாகுபலி’ என்ற பெயர் இந்திய சினிமாவின் ஒரு அங்கமாகவும், பல இயக்குநர்களுக்கு ஒரு பாடமாகவும் இருந்து வருகிறது. சமூக வலைதளங்களில் #9YearsOfBaahubali2 என்ற ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.













