கடந்த மே மாதம் மற்று ஜூன் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிகவும் கடினமானதாகவும் நம்மில் தெரிந்த பலரையும் பலிவாங்கும் ஒரு அலையாகவும் வந்தது.
சினிமா நடிகர்கள், அரசியல் பிரபலங்களில் பல முக்கியஸ்தர்கள் கொரோனாவால் மரணம அடைந்த நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள் போன்றவை மூடப்பட்டன.
சில நாட்களுக்கு முன் தான் கோவில்கள், தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. கோவில்களில் சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாள் விடுமுறையும் தியேட்டருக்கு 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்று அனுமதிக்கப்பட்டு வந்தது.
கடந்த வாரம் முதல் கோவில்களில், வெள்ளி சனி ஞாயிறு அடைக்கப்படுவதை அரசு தளர்த்தியது. இந்த நிலையில் இந்த வாரம் தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.








