ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சமீபத்தில் இந்திய அணியில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியா சென்றுள்ள அணியில் நடராஜனும் இடம்பிடித்துள்ளார்
இன்று நடைபெற்று வரும் 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஸ்சாங்சேவை க்ளீன் போல்டாக்கி சர்வதேச அரங்கில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் நடராஜன்.
இதனால் நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.











