---Advertisement---

விசாரணை கைதிக்கு பாதுகாப்பு…மனு கொடுத்த மனைவி…

Published on: July 15, 2024
Balu
---Advertisement---

பகுஜன் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியை சார்ந்த மாநிலத் தலைவரின் படுகொலை தமிழத்தையே உலுக்கியது. கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அக்கட்சியின் தலைவர் மாயாவதி சென்னை வந்து சென்றார்.

தமிழகத்தின் பல்வேறு கட்சித்தலைவர்களும் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை சந்தித்து அன்மையில் தனது ஆறுதலை கூறி வந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அதோடு குற்றவாளிகள் மீதான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொல்லியுமிருந்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாக பார்க்கப்படுபவர்களிடம் தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Armstrong
Armstrong                                                                                                                                  கடந்த வாரம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்றதோடு தான் மறைத்து வைத்துருந்த கைத்துப்பாக்கியால் போலீஸார் மீது துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளார். கைதியிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எதிர் தாக்குதலை காவல் துறையனர் நடத்தியுள்ளனர்.

இந்த என்கவுண்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொல்லப் பட்டார். இந்நிலையில் காவல் துறையினரின் பிடியில் விசாரணையில் இருந்து வரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவராக பார்க்கப்படும் மற்றொருவரான பொன்னை பாலுவின் மனைவி தனது கனவர் உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் கைதி என் கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக எதிர்கட்சியான அதிமுக, பாஜக ஆகியவை சந்தேகத்தை கிளப்பியுள்ள நிலையில், பொன்னை பாலுவின் மனைவி பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

News update regarding Shalini Ajith Kumar presenting Ajith Kumar's new film AK64, marking his entry into production.

Shalini Ajith Kumar to present AK64: ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் ஏகே 64! அஜித்தின் புதிய அவதாரத்தில் அதிரடி ஆரம்பம்!

Actor Arulnithi discussing the film 'Eetti' that he regrets missing out on during a recent interview.

Arulnithi Regret: அருள்நிதி வருத்தம்: அவர் தவறவிட்ட அதர்வாவின் அந்தப் படம்!

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!

Vijay Sethupathi and director Mysskin at the Train teaser launch event.

‘டிரெய்ன்’ படப்பிடிப்பில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! ‘செட்டு ஒரு கல்யாண வீடு மாதிரி இருந்தது’ – விஜய் சேதுபதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்!