த்ரிஷா இல்லனா நயன் தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன் இவரது முதல் படம் சர்ச்சை படம், இரண்டாவது படம் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் சர்ச்சையையும் பிரச்சினையும் ஏற்படுத்திய படம்.
ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது புதிய படம் இயக்குகிறாராம்
பல்வேறு நாயகர்களைச் சந்தித்துக் கதைகள் கூறிவந்தார். இறுதியாக, விஷாலுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே நாயகனாக நடிக்கவுள்ளார். ‘எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனமே, இந்தப் புதிய படத்தையும் தயாரிக்கவுள்ளது.
விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. தற்போது விஷாலுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.







