துல்கர் சல்மான் நடிப்பில் குருப் என்றொரு திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை துல்கர் சல்மானின் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் சுகுமாரன் குரூப் என்ற குற்றவாளியை பற்றியது.
1984 முதல் இவரை தேடி வரும் கேரள போலீசால் சுகுமாரன் குரூப்பை கண்டுபிடிக்க முடியவில்லையாம் அவரைப்பற்றிய கதை இது.
இந்த படத்தின் ப்ரமோஷன் ஒன்றில் பேசிய பட நாயகன் துல்கர் சல்மான், ‘விஜய் ஒரு சூப்பர் ஹீரோ போன்றவர். அவரது நடனத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கமிங்’ பாடலில் விஜய்யின் நடனத்தைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.







