ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு திருமாவளவன் சூர்யாவை பாராட்டியதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா பதிலுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் சூர்யா கூறியிருப்பதாவது,
மக்கள் தொகையில் மிக சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும் தாங்கள் இயக்கமும் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தாங்கள் குறிப்பிட்டது போல தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மனநிறைவை தந்துள்ளது.
பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினையை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் படத்தின் நோக்கம்.
ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி என சூர்யா தெரிவித்துள்ளார்.
மதிப்புக்குரிய திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு… @thirumaofficial #JaiBhim pic.twitter.com/WOaHkrCYJ3
— Suriya Sivakumar (@Suriya_offl) November 15, 2021







