---Advertisement---

தொடரும் தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனம்

Published on: September 10, 2021
---Advertisement---

ஜனநாயக ரீதியில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் அரசை கடந்த மாதம் தாலிபான்கள் கைப்பற்றினர். 1996ல் இருந்து 2000 வரை தாலிபான்களின் கொடூர ஆட்சி ஆப்கானிஸ்தானில் நடந்தது. அப்போது யாரும் கல்வி கற்க கூடாது. கலை நிகழ்ச்சிகள் பயிலக்கூடாது , இசை கேட்க கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் அமெரிக்க படைகள் வெளியேறியதால் மீண்டும் உள்ளே நுழைந்த தாலிபான்கள் அங்கே ஆட்சி நடத்தி வருகின்றனர்.

இவர்கள் தினம் தோறும் ஒரு அக்கிரமச்செயலை அரங்கேற்றி வருகின்றனர். சமீபத்தில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டார். கிராமிய பாடல்களை பாடும் ஒரு பாடகர் கொல்லப்பட்டார். சமீபத்தில் தாலிபான்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டனர்.

சமீபத்தில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் கொடூரமாக தாலிபான்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இரண்டு பத்திரிக்கையாளர்களை முதுகிலும், பின்புறத்திலும் தாலிபான்கள் தாக்கியுள்ளனர்.

ஆப்கனில் இதனால் பத்திரிக்கையாளர்கள் தொடர்பான பாதுகாப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.