---Advertisement---

துணை அதிபரின் சகோதரரை கொன்ற தாலிபான்கள்

Published on: September 11, 2021
---Advertisement---

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. 20 வருடங்களுக்கும் மேலாக இருந்த ஜனநாயக ஆட்சியை அகற்றி தற்போது தாலிபான்கள் மீண்டும் தங்கள் ரத்தவெறி ஆட்சியை தொடங்கியுள்ளனர்.

ஆப்கனை சேர்ந்த பாதி மக்கள் அயல்நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து விட்டனர். ஆப்கனில் இனி நிம்மதியாய் இருக்க முடியாது என்று அவர்கள் முடிவு எடுத்து விட்டனர்.

ஆப்கனில் தாலிபான்களின் சேட்டைகள் கொஞ்சம் கூட அடங்கவில்லை என்பதே உண்மை.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர். அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், துணை அதிபராக இருந்த அம்ருலே சாலே, தாமே அதிபர் எனக் கூறியிருந்தார். மேலும், அவரது தலைமையிலான தேசிய கிளர்ச்சிப் படை, பஞ்ச்ஷிர் பகுதியில் தாலிபான்களை எதிர்த்துப் போராடி வந்தது.

இந்த நிலையில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரரான ரோகுல்லா சலேயை தலீபான்கள் சிறைபிடித்தனர். பின்னர் அவரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம் சில நாட்களுக்கு முன்னரே பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிராக நடந்த சண்டையில் ரோகுல்லா கொல்லப்பட்டதாக அந்த மாகாணவாசி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

அவரது உடலைக்கூட உறவினர்களுக்கு கொடுக்க மாட்டோம் அவரது உடல் அழுகட்டும் என தாலிபான்கள் கூறியுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.