நடிகை ஜெயசித்ரா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து பின்பு முக்கிய கதாபாத்திரத்திலும் முடிந்தவரை அனைத்து விதமான ரோல்களிலும் நடித்துவிட்டார்.
அதன் பிறகு ஜெயசித்ரா தன் இயக்கத்தில் அவரின் மகன் அம்ரிஷ் கணேஷ்ஷை தமிழில் அறிமுகம் செய்தார். அதன் பின் பட வாய்ப்புகள் எதுவுமில்லாதல் சிறிது காலம் அம்ரிஷ் தமிழ் திரையுலகில் காணாமல் போயிருந்தார், இதனால் இசை அமைக்கும் பணியில் களம் இறங்கினார்.
இதனை தொடர்ந்து, இவர் தமிழில் மொட்ட சிவா கெட்ட சிவா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சார்லி சாப்ளின் 2, பொட்டு, சத்ரு திரைப்படங்களில் இசையமைத்தார். இப்பொழுது இவர் கொரோனா பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளார். அவரின் மகள் ஜெயகௌஷிகாவின் முதல் பிறந்தநாளையொட்டி கொரோனா பாதித்த ஏழை மக்களுக்கு உதவும் வகையில் அரிசி மூட்டைகளை இலவசமாக வழங்கியுள்ளார்.


