தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது படப்பிடிப்பு மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்காக இலங்கையில் உள்ள கொழும்பு நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவர், சர்வதேச அளவில் பிரபலமான தமிழ் பாடகி தீயை (Dhee) நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தீயினுடைய இரண்டாவது சுயாதீன இசை ஆல்பத்தில் (Independent Album) இடம்பெற்றுள்ள ‘வரி வரி’ (Vari Vari) பாடலை சூர்யா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடல் ‘தமிழ் பாப்’ (Tamil Pop) வகையைச் சார்ந்தது. ஏற்கனவே ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற தீ, தற்போது இந்த ‘வரி வரி’ பாடல் மூலம் மீண்டும் இசை ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இந்தப் பாடலை ரசித்த சூர்யா, தீயைச் நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், சர்வதேச தரத்தில் தமிழ் சுயாதீன இசை வளர்ந்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சூர்யா மற்றும் தீ இணைந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. சூர்யா போன்ற ஒரு பெரிய நட்சத்திரம், சுயாதீன கலைஞர்களை (Independent Artists) ஊக்கப்படுத்துவது இசைத்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் – தீ – விவேக் கூட்டணியில் வெளியாகியுள்ள இந்த ‘வரி வரி’ பாடல், வரும் நாட்களில் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.













