---Advertisement---

ஸ்டாலின் பதவியேற்பு குறித்து வேண்டுகோள்

Published on: May 6, 2021
---Advertisement---

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்கிறார். தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் பெரும் பிரச்சினைகள் நிலவுவதால் ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை.

உடன்பிறப்புகளின் அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சரானாலும், உங்கள் முன்னிலையில் பதவி ஏற்க முடியவில்லையே என்ற கவலை உள்ளது. உடன்பிறப்புகளின் நலனே முக்கியம்! எளிய விழாவினை வீடுகளில் இருந்தே கண்டுகளியுங்கள்; உடல் அங்கே என்றாலும் உங்கள் உள்ளம் சென்னையில்தான் என்பதை அறிவேன். இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறி உள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.