திமுக கட்சியின் ஆரம்பகாலத்தில் இருந்தே அதில் உறுப்பினராக இருந்து, கருணாநிதி கைக்கு திமுக கழகம் கட்டுப்பாட்டில் வந்த உடன் அதில் இளைஞரணி செயலாளராக தொண்டாற்றி, மிசா காலத்தில் சிறையில் இருந்து எல்லாம் கஷ்டப்பட்டவர் ஸ்டாலின் என்பது வரலாறு.
திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்துக்கு பிறகு கட்சி தலைவரான ஸ்டாலின் முழு மூச்சாக கட்சி பணியாற்றி வருகிறார்.
தேர்தல் வேறு நெருங்குவதால் கழகப்பணிகளில் விடாமல் சுறுசுறுப்புடன் களப்பணியாற்றுகிறார் இவர்.
இன்று மார்ச்1ல் இவரின் பிறந்த நாள் ஆகும் இதை ஒட்டி முக்கிய திமுக நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.













