பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை போற்றி வணங்கும் நாளாக இன்றைய நாள் அமைகிறது. ஆம் இன்றுதான் கிருஷ்ணரின் ஜென்மாஷ்டமி என சொல்லக்கூடிய கிருஷ்ணர் பிறந்த நாள்.
ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
ஹிந்துக்களின் வேத நூலாக போற்றப்படும் பகவத்கீதையை எழுதிய ஸ்ரீ கிருஷ்ணர் மதுரா நகரில் பிறந்து சிறுவயதில் விளையாட்டாக குறும்புத்தனமாக வெண்ணெய் திருடி தின்பார் என சொல்வதுண்டு.
மாடுகள் மேய்த்து வாழ்ந்த கிருஷ்ணர் தனது ஞானத்தால் மஹாபாரத பாண்டவர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டார் எனவும் சொல்லப்படுவதுண்டு.
போர்க்களத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உதிர்த்த உயர்ந்த கருத்துக்களே பகவத் கீதையாகும்.
மஹாபாரத போர் முடிந்து 36 ஆண்டுகளுக்கு பின் துவாரகை நகரம் கடலுக்குள் சென்றதாகவும் சொல்லப்படுவதுண்டு. அதுவரை ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையை ஆண்டதாகவும் சொல்லப்படுவதுண்டு.
இன்று கிருஷ்ண ஜெயந்தியாதாலால் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் செய்வித்து கையில் புல்லாங்குழல் கொடுத்து, காலில் மாவு தடவி அவர்களின் பாதங்கள் வீட்டில் படும்படி செய்யுங்கள் பலகாரம் பட்ஷணங்கள் செய்து அதை கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து வழிபடுங்கள் நல்லதே நடக்கும் நன்மையே பிறக்கும்.







