பிரபல தெலுங்கு நடிகை சார்மி. சிம்பு நடித்த காதல் அழிவதில்லை, பிரபு சாலமனின் லாடம் உள்ளிட்ட படங்களில் தமிழில் நடித்துள்ளார் சார்மி. தெலுங்கில்தான் இவர் அதிகம் நடித்துள்ளார் தெலுங்கின் முன்னணி நாயகியாக இருந்த இவர் மற்றும் இயக்குனர் பூரி ஜெகநாத் உள்ளிட்டோர் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் கடந்த 2017ல் சிக்கினர்.
மேலும் முமைத் கான், ரகுல் ப்ரீத் சிங், நடிகர்கள் ராணா, நவ்தீப், ரவிதேஜா உள்ளிட்டோர் சிக்கியுள்ளனர். ரகுல் ப்ரீத் சிங் தவிர மற்ற அனைவரிடமும் கடந்த 2017-ம் ஆண்டு தெலங்கானா கலால் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் ஹவாலா பணமும் கை மாறி இருப்பதாக அறிய முடிகிறது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை 10.30 மணிக்கு ஹைதராபாத் அமலாக்க துறை அதிகாரிகள் முன்பு நடிகை சார்மி கவுர் ஆஜரானார். இவரிடம் 11 மணிக்கு விசாரணை தொடங்கியது. இயக்குநர் பூரி ஜெகன்நாத்திடம் நேற்று முன் தினம்10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகை சார்மியிடமும் மணிக்கணக்கில் விசாரணை நடத்தப்பட்டது.
பூரி ஜெகன்நாத்துக்கும், உங்களுக்கும் (நடிகை சார்மி) போதை மருந்து உபயோகிக்கும் பழக்கம் உள்ளதா? கெல்வினுடன் புகைப்படம் எடுத்துள்ளீர்கள். அவரின் செல்போனில் உங்களின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.







