இயக்குநர் செல்வராகவன் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு தனி முத்திரை தான். இப்போது அவர் தனது எவர்கிரீன் ஹிட் படமான ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். பொதுவாகவே ஒரு படம் ஹிட் அடித்தால் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது வழக்கம். ஆனால் கிளைமாக்ஸிலேயே ஹீரோயின் இறந்துபோன ஒரு படத்திற்கு எப்படி பார்ட் 2 சாத்தியம் என்கிற கேள்வி எல்லோரிடமும் இருந்தது. அதற்கு செல்வா இப்போது ஒரு தரமான விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி சோழர்களுடன் நடந்து போவது போல முடித்திருப்போம், அதனால் பார்ட் 2 எடுப்பது ரொம்ப சுலபம். அதே மாதிரி புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமார் உயிரோடு தான் இருக்கிறான், அதனால் அங்கிருந்து கதையை ஈஸியாக நகர்த்தலாம். ஆனால் 7ஜி ரெயின்போ காலனி அப்படி கிடையாது. ஹீரோயின் அனிதா இறந்துவிடுகிறாள், ஹீரோ கதிர் அவளுடைய நினைவுகளோடு தான் வாழ்கிறான். இதில் எப்படி அடுத்த பாகம் வரும் என்று பலரும் கேட்டனர்.

தன்னுடைய மனதில் தோன்றிய ஒரு மிரட்டலான ஐடியாவை பிடித்துக்கொண்டு தான் இந்த 7ஜி 2 படத்தை எடுக்க முடிவெடுத்ததாக செல்வா கூறியுள்ளார்.
ஹீரோயின் இறந்த பிறகு கதிரின் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும், 20 வருடங்களுக்கு பிறகு அவன் அதே நினைவுகளில் இருக்கிறானா அல்லது முன்னேறி விட்டானா என்கிற அந்த ஒரு ‘ஸ்பார்க்’ தான் இந்த இரண்டாம் பாகத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு எமோஷனல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த ரகசியத்தை செல்வராகவன் உடைத்ததுமே இப்போது 7ஜி 2 மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ரவி கிருஷ்ணா மீண்டும் கதிராக நடிக்கும் இந்த படத்தில் அனஸ்வரா ராஜன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பழைய நினைவுகளையும் தற்போதைய எதார்த்தத்தையும் இணைக்கும் ஒரு மேஜிக் இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வா – யுவன் கூட்டணி இணைந்திருப்பது சினிமா வட்டாரத்தில் ஒரு பெரிய வைப்பை ஏற்படுத்தியுள்ளது.













