---Advertisement---

நான் சந்தியாவை கொலை செய்யவில்லை – கணவர் திடீர் பல்டி

By Sri
Published on: February 8, 2019
Sandhya husband change his confession - tamilnaduflashnewscom
---Advertisement---

சந்தியாவை தான் கொலை செய்யவில்லை என அவரின் கணவர் பாலகிருஷ்ணன் திடீர் பல்டி அடித்துள்ளார்.

சென்னையில் துணை நடிகை சந்தியாவை, அவரது கணவர் கொலை செய்து, அவரின் உடலை பல பாகங்களாக வெட்டி, 4 மூட்டைகளில் கட்டி சென்னையில் பல இடங்களில் போட்டுவிட்டார். தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர். சினிமா மோகத்தில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கொலை செய்தேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்தி வெளியானது.

ஆனால், நேற்று அவரை ஆலந்தூர் நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வந்த போது ‘நான் கொலை செய்யவில்லை.. நான் ஜெயிலுக்கு போயிட்டு திரும்பி வந்து விடுவேன்” என அவர் செய்தியாளர்களிடம் கூலாக கூறினார். இது போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.