நடிகர் மாதவன் தற்போது ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை கதையில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே இறுதி சுற்று என்ற படத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடித்தவர்.
இப்போது சூரரை போற்று படத்தின் வெற்றியால் உச்சத்தில் உள்ள இயக்குனர் சுதா கொங்கரா மாதவனை வைத்து படம் எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
அந்த கதையில் மாதவன், இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரான ரத்தன் டாடா வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதை முற்றிலும் மறுத்துள்ளார் மாதவன்,
துரதிர்ஷ்டவசமாக இது உண்மையில்லை. ரசிகர்கள் சிலர் அவர்கள் விருப்பத்தில் உருவாக்கிய போஸ்டர். இப்படி ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாகவும் இல்லை. அதைப் பற்றிய எந்தவித உரையாடலும் நடைபெறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.








