பிரதமர் மோடி அடிக்கடி டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் பேசுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் பேசுகிறார்.
கொரோனா தடுப்பூசி இந்த வருடத்தின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் கோவேக்ஸின் பிறகு கோவி ஷீல்டு ஊசிகள் போடப்பட்டது.
தற்போது 100 கோடி மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இதனை முன் நிறுத்தும் வகையில் பிரதமர் அவர்களின் உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.







