மதுரையில் இருந்து 15 கிமீ தூரத்தில் இருப்பது அழகர் கோவில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் இந்த அழகர் கோவிலை பார்த்து செல்லாமல் இருக்க மாட்டார்கள்.
பசுமை மிகுந்த மலைகளுக்கிடையே அழகாக இக்கோவில் இருக்கிறது. வைணவத்தலங்களில் முக்கியமான கோவில் அழகர் கோவில் மலையின் அடிவாரத்தில் உள்ளது.
அதற்கு மேலே பழமுதிர்ச்சோலை உள்ளது அறுபடை வீடுகளில் ஒன்றான இக்கோவிலும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் உள்ளது. சரியாக அழகர் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் பழமுதிர்ச்சோலை உள்ளது.
கோவில் சார்பில் பஸ் வசதியும் இங்கு உள்ளது.
அதற்கு மேலே உள்ள நூபுர கங்கையில் குளித்துவிட்டோ அல்லது அந்த நீரை தலையில் தெளித்துக்கொண்டோ அருகில் இருக்கும் பழமுதிர்ச்சோலை முருகனை வழிபடுவார்கள்.

பழமுதிர்ச்சோலை முருகனின் சிறப்பு என்னவென்றால் அவ்வை பாட்டிக்கு முருகன் தமிழ் கற்றுக்கொடுத்து அவன் விளையாட்டை அரங்கேற்றம் செய்த இடம்.
இங்குள்ள நாவல் மரத்தில்தான் முருகன் சுட்ட பழம் சுடாத பழம் வேண்டுமா என அவ்வைப்பாட்டியிடம் கேட்ட இடம்தான் இது.
மிக சிறப்பு வாய்ந்த இந்த இடத்தில் பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது இது அறுபடை வீடுகளில் ஒன்றாகும். ஆறாவது படை வீடாக அழைக்கப்படுகிறது. மதுரையிலே திருப்பரங்குன்றத்தோடு சேர்த்து இரண்டு படைவீடுகள் ஒரே ஊரிலேயே அமைந்துள்ளது சிறப்பு.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து அழகர் கோவிலுக்கு பஸ் வசதி அடிக்கடி உள்ளது. இங்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு மலை மேலே உள்ள அவரின் மருமகனான முருகப்பெருமானை பழமுதிர்ச்சோலையில் தரிசனம் செய்து வாழ்வில் வளம் பெறுங்கள்.













