மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த 6 பேர் இரவு படத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுடன் திருமணமான பெண் ஒருவரும் சென்றுள்ளார். இதை பார்த்த ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அனைவரையும் விசாரிப்பது போல் விசாரித்து விட்டு எல்லோரையும் அனுப்பிவிட்டு மகேஷ்குமார் என்பவரையும் அந்த பெண்ணையும் மட்டும் அனுப்பாமல் வைத்திருந்துள்ளனர்.
பின்னர் மகேஷ்குமாரிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாயை ஏடிஎம்மில் எடுக்க சொல்லி வாங்கி விட்டு, அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி விட்டு ஆட்டோவில் ஏற்றி அனுப்பியுள்ளார் திலகர் திடல் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ் என்பவர்.
இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







