லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்டு வரத் தயாராகிவிட்டார். ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மெகா ஹிட் வெற்றிக்குப் பிறகு, நயன்தாரா அடுத்ததாக எந்த ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அந்த காத்திருப்பிற்கு தற்போது ஒரு விடை கிடைத்துள்ளது. பாலிவுட் சுல்தான் சல்மான் கான் நடிக்கும் அடுத்த புதிய படத்தில் நயன்தாரா தான் கதாநாயகி என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் இந்த மெகா பட்ஜெட் படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதை படக்குழுவினர் தற்போது ஒரு மாஸ் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். “The Queen Arrives” என்று நயன்தாராவை வரவேற்று படக்குழு பதிவிட்டுள்ள இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. வம்சி பைடிப்பள்ளி ஏற்கனவே தமிழில் விஜய்யின் ‘வாரிசு’ படத்தை இயக்கியவர் என்பதால், இந்தப் படம் தென்னிந்திய ரசிகர்களிடமும் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
View this post on Instagram
சல்மான் கான் மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாகத் திரையில் இணையப் போகிறார்கள் என்பதுதான் இந்த செய்தியின் ஹைலைட். இது ஒரு பான்-இந்திய படமாக உருவாக உள்ளதால், நயன்தாராவின் மார்க்கெட் தற்போது பாலிவுட்டில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்கிறார். 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகத் தொடங்க உள்ளது.
பாலிவுட்டின் டாப் ஹீரோக்களுடன் நயன்தாரா அடுத்தடுத்து கமிட் ஆவது தமிழ் ரசிகர்களை செம குஷியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘ஹாய்’, ‘மண்ணாங்கட்டி’ போன்ற படங்கள் வரிசையாகக் காத்திருக்கும் நிலையில், தற்போது சல்மான் கானுடனான இந்த கூட்டணி இந்திய சினிமாவையே அதிர வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்சன் மற்றும் எமோஷன் கலந்த கதையாக உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாராவிற்கு மிகவும் பவர்ஃபுல்லான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாம்.













