---Advertisement---

மின்சாரத்தை சீரழித்து மும்பை மீது சைபர் தாக்குதலா சீனா மீது குற்றச்சாட்டு

Published on: March 2, 2021
---Advertisement---

சீனா நமது இந்தியாவுக்கு பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வரும் நாடாக உள்ளது. அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சீனா எல்லை பிரச்சினையை கொண்டு வந்து இந்த இடம் எங்களுக்குத்தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது.

கொரோனா வைரஸ் எனும் கொடிய வைரஸை உலகமெங்கும் சீனாதான் பரப்பியது என்ற அடிப்படை கருத்தும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் மின் விநியோகத்தில் கடும் பிரச்சினை ஏற்பட்டது. கடும் மின் தடை ஏற்பட்டது.

இது குறித்து மஹாராஷ்டிரா சைபர் க்ரைம் போலீசார் ஒரு அறிக்கை அளித்திருந்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணையின் முதல் கட்ட தகவலின் படி மஹாராஷ்டிர அரசு ஒரு தகவலை தெரிவித்துள்ளது. மும்பையை இருட்டடிப்பு செய்ய சைபர் தாக்குதல் நடைபெற்றதாக அமைச்சர் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க