பிக்பாஸ் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கே சாண்டியே காரணம் என்பது போல் முகேன் கூறியுள்ளார்.
90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக கவின், தர்ஷன் இருவரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் என 4 பேர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், தற்போது வெளியான புரமோ வீடியோவில் பேசும் முகேன் ‘ சாண்டி அண்ணன் இல்லையெனில் இவ்வளவு மெமரி இங்கே இருந்திருக்காது. மகிழ்ச்சியை மொத்தமாக அப்படியே கொடுப்பார். சோகம் என்றால் வரமாட்டார். இங்கு எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க அவர்தான் காரணம்’ என அவர் பேசியுள்ளார்.
#Day100 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/HVL9vW3pW0
— Vijay Television (@vijaytelevision) October 1, 2019







