நீ பொட்டு வெச்ச தங்க குடம்… ஐபிஎல் 2025 எம்.எஸ் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி…!

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் எம் எஸ் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். எத்தனை ஆர்டிஎம் கார்டுகளை வழங்கலாம் என்பது தொடர்பாக பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும் உள்நாட்டு போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் இரண்டு பேரையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION என்ற முறையில் வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலாம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பு 5 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் மூலம் UNCAPPED வீரராக எம் எஸ் டோனியை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

எம் எஸ் தோனிக்காகவே இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்ற ஐந்து ஆண்டுகளான நிலையில் UNCAPPED பிளேயராக எம் எஸ் தோனியை சிஎஸ்கே அணி தக்க வைக்கலாம் என்று நம்பிக்கை எழுந்துள்ளது. இந்த விதிமுறை 2021 வரை ஐபிஎல்-ல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now