அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்றாலே சர்ச்சைதான் என்றாகிவிட்டது. தினமும் இவரைப்பற்றி செய்தி வராத நாட்களே இல்லை எனலாம். அந்த அளவு இவரை பற்றி ஏதாவது செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.
சமீபத்தில் கூட ஜி.எஸ்.டி கூட்டத்திற்கு செல்லாததற்கு காரணம் கேட்டதற்கு ஒரு வளைகாப்பு இருந்தது என நக்கலாக பேசியதால் விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தூத்துக்குடி செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது இரண்டு லேப்டாப்களை எடுத்து வந்ததால் அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை எஸ்.ஐ அவருக்கு அனுமதி மறுத்தார்.
பின்பு கடும் வாக்குவாதம் எழுந்ததால் எஸ்.ஐ மன்னிப்பு கோரினார். பின்பு 2 லேப்டாப்களுடன் அவரை பயணிக்க அனுமதித்துள்ளனர்.













