மெல்லிசை படம் வெளியீட்டு தேதி இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மெல்லிசை படம் ஜனவரி 30 அன்று திரையரங்குகளில் வெளியாகப் போகுது. பெரிய ஹீரோ, பெரிய பில்டப் இல்ல… ஆனா உள்ளுக்குள்ள ஏதோ பேசுற மாதிரி ஒரு எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு உருவாகி இருக்கு.
“மெல்லிசை”ன்னு பேர் கேட்டாலே, காது கிழிக்கிற சத்தம் இல்லாம, நெஞ்சுக்குள்ள மெதுவா இறங்குற ஒரு உணர்ச்சி தான் ஞாபகம் வருது. இந்த படம் கூட அதே மாதிரி தான் இருக்கும்னு சொல்றாங்க. கதையோ ரொம்ப சிம்பிள். ஒரு சாதாரண மனிதன். குடும்ப பொறுப்பு, வயசு, வேலை, வாழ்க்கை ஓட்டம்… இதுக்குள்ள அவன் ஒருகாலத்தில் கனவு கண்ட விஷயம் மீண்டும் தலையை தூக்குது.
கிஷோர் இந்த படத்துல நாயகனா நடிச்சிருக்கார். அவரை பார்த்தாலே “இவன் நம்ம பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி”ன்னு தோணும். அதுவே இந்த படத்தோட பெரிய பிளஸ். ஹீரோயிசம் வசனம், பஞ்ச் டயலாக் இல்ல. ஆனா வாழ்க்கையில நாம எல்லாரும் ஒரு தடவை நினைச்சு பார்த்திருக்குற விஷயங்கள் இதில் வரும்னு பேசப்படுது.
அப்பா–மகள் உறவு, சொல்லாமலே சேர்ந்து வரும் சுமைகள், மனசுக்குள்ள அடக்கி வச்ச வலிகள்—இவையெல்லாம் இந்த படத்துல சத்தமில்லாம வருமாம். ட்ரெய்லர் பார்த்த சிலர் “இது பெரிய ஓப்பனிங் படம் இல்ல… ஆனா ஏதோ இருக்கு”ன்னு சொல்றாங்க.
ஜனவரி 30க்கு பிறகு தான் தெரியும். மெல்லிசை படம் சினிமா ஹிட்டா ஆகுமா இல்லையா தெரியாது. ஆனா, பார்த்தவங்களோட மனசுக்குள்ள கொஞ்ச நேரம் தங்கி போனா, அதுவே இந்த படத்துக்கு வெற்றி தான்.













