கடந்த 2019 சீனாவுன் வூகான் மாஹாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. அது தொடங்கியது முதல் உலகத்தை தன் பக்கம் வைத்து கொண்டு எல்லோரையும் ஒரு ஆட்டு ஆட்டி வருகிறது.
கடந்த வருடம் மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியாவில் பரவிய கொரோனா இந்தியாவில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது. பலர் இதற்கு பலியாகினர்.
கடந்த அக்டோபரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வந்த கொரோனா வைரஸின் வேகம் தற்போது மீண்டும் கூடுவதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவில் மும்பைதான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா மீண்டும் பரவுவதால் நாளை முதல் மஹாராஷ்டிராவில் இரவு 8 மணிக்கே கடைகள் , நிறுவனங்கள் அடைத்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.













