குட்கா மற்றும் பான் மசாலாவுக்கு குஜராத்தில் மேலும் ஒரு ஆண்டு தடை நீட்டிக்கப்படுவதாக குஜராத் மாநில அரசு தெரிவித்து இருக்கின்றது.
குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடைவிதித்து குஜராத் அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குஜராத்தில் நிக்கோட்டின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை தயாரிக்க விற்பனை செய்ய ஒரு ஆண்டு தடை விதித்து அம்மாநில அரசு அரசாணை பிறப்பித்தது.
குட்கா, பான் மசாலாவில் நிக்கோட்டின் இருப்பது மனிதனின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே இதனால் குடிமக்கள் மற்றும் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த தடை செப்டம்பர் 13ஆம் தேதி முதல் அடுத்த ஒரு ஆண்டுக்கு நீடிக்கும் என்று குஜராத் மாநில அரசு தெரிவித்து இருக்கின்றது.

