---Advertisement---

“கடைசி டெஸ்டும் நான் பாஸ் ஆயிட்டேன்”ன்னு – சொல்லிய மம்முட்டி, மனசை நெகிழ வெச்ச உரையாடல்!!!

By Sri
Published on: August 20, 2025
Mammootty
---Advertisement---

சமீபத்துல சினிமா ரசிகர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷம் கொடுத்த செய்தி என்னன்னா, மெகா ஸ்டார் மம்முட்டி முழு ஆரோக்கியத்தோட மீண்டு வந்தாராம்! இந்த மகிழ்ச்சியை அவரோட நெருங்கிய தோழனும், நடிகர் எழுத்தாளருமான வி. கே. ஸ்ரீராமன் மனதை நெகிழ வைக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

V.K. Sreeraman - Mammootty
V.K. Sreeraman – Mammootty

சில நாட்களாக, சிகிச்சையில் இருந்த மம்முட்டி, கடைசி பரிசோதனையையும் வெற்றிகரமாக முடித்து, ஸ்ரீராமனுக்கு அழைத்து சொல்லிய போது, “கடைசி டெஸ்டும் பாஸ் ஆயிட்டேன்”ன்னு கூறினார். இதை கேட்டு ஸ்ரீராமன் சிரிச்சுட்டு, “அது பெரிய விஷயமா? நீ பாஸ் பண்ணுவேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்”ன்னு பதில் கொடுத்தார்.

இது தான், நட்பின் உண்மையான ரகசியம்! மம்முட்டி சிரித்துப், “நீ ஜோசியரா?”ன்னு கேட்டார்.

அதற்கு ஸ்ரீராமன் கவிதை மாதிரி பதில் சொல்லீருக்காரு  –
“நான் காலத்துக்குமேல் நடக்கிறவன். இருளிலும் வெளிச்சத்திலும், மழையிலும் வெய்யிலிலும், குச்சி இல்லாம, குடை இல்லாம முன்னே போறவன்.”

இந்த உரையாடல் வெறும் சின்ன பேச்சல்ல; இது அவர்களது நண்பத்துவத்தின் ஆழத்தையும், உண்மையான அன்பையும் வெளிக்கொண்டு வந்தது. ஸ்ரீராமன் அந்த பதிவை முடித்து இறைவனை வேண்டி, “எங்களை காப்பாற்று”ன்னு பிரார்த்தனை செய்தார். அதோட சேர்த்து, மம்முட்டியோட இளமைக்கால புகைப்படத்தையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்னும் நினைவூட்டும் விதமாக வைத்தார்.

இது வெறும் நண்பர்களுக்குள்ள உரையாடலல்ல; உண்மையான நட்பு எப்படியிருக்கணும் என்பதற்கும் ஒரு உயிரோட்டமான எடுத்துக்காட்டு. மம்முட்டி மீண்டு வந்ததைப்பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டம் பண்ணி மகிழ்ந்துள்ளனர். மீண்டும் அவர் திரையுல வரப்போகிறார்னு தெரிந்ததும், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோட எதிர்பார்த்து வருகிறார்கள்.

மேலும், ஸ்ரீராமன் பகிர்ந்த கவிதை மாதிரியான உரை, ரசிகர்களுக்கே ஒரு நம்பிக்கையான செய்தி மட்டுமல்ல, வாழ்க்கையை எதிர்கொள்ளும் மன வலிமையை அவர்களுக்குத் தெரியவைத்தது. இருவரும் பகிர்ந்த அந்த சின்ன உரையாடல், ரசிகர்களின் மனதில் இன்னும் நீண்ட நாட்களுக்கு ஒலிக்கும் வகையில் நிலைத்திருக்கும்.


Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.