கேரளாவில் வருடா வருடம் சீசன் காலத்தில் கடும் கன மழை பெய்வதும், அதனால் வெள்ளம் ஏற்படுவதும் நிலச்சரிவு ஏற்படுவதும் தொடர்கதையாகி உள்ளது.
இந்த வருடமும் தற்போது கடும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன.
கேரள மாநிலம் கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மழையால் ஏற்பட்ட சேதத்தில் 25 பேர் பலியாகியுள்ளனர். இங்குள்ள மலம்புழா, மலங்கரா அணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.













