நாட்டாமை திரைப்படத்தில் நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் ஈரோடு செளந்தர். இந்த காட்சியை எழுதியவரும் இவரே நடித்தவரும் இவரே.
கே.எஸ் ரவிக்குமாரின் நெருங்கிய நண்பரான இவர் கே.எஸ் ரவிக்குமாரின் வெற்றிக்கு துணை நின்றவர். கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய பல கிராமத்து படங்களுக்கு இவர்தான் வசனம் எழுதியுள்ளார்.
நாட்டாமை, சேரன் பாண்டியன் போன்ற படங்கள் அவற்றில் முக்கியமான படங்கள் ஆகும்.
சரத்குமாரை வைத்து சிம்மராசி படத்தையும் இயக்கினார் இப்படம் கடந்த 1998ல் வெளிவந்தது.
இவர் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 63. கம்பீரமான வசன நடையால் பல படங்களில் கலக்கிய ஈரோடு செளந்தரின் மரணம் திரையுலகினர் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.







