நேற்று நடந்த சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில் முதல்வராக இருந்த திரு எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் வரும் 7ம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் முக.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.













