அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இவர் முன்னாள் முதல்வருமாவார்.
இவர் சிகிச்சைக்காக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு குடலிறக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில் எண்டாஸ்கோபி சிகிச்சைக்காக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் இன்று எடப்பாடி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பரிசோதனை முடிந்த பிறகு இன்று பிற்பகல் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.













