தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய சட்டப் போராட்டத்தையும், அதிகாரப் போட்டியையும் சந்தித்து வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி, தமிழகத்தின் மிகப்பெரிய ஒற்றை சக்தியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளுநர் இதுவரை விஜய்க்கு அழைப்பு விடுக்காதது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வரும் நிலையில், புகழ்பெற்ற இயக்குநரான திருச்செல்வம் (Thiruselvam) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். “மக்களின் தீர்ப்பை அதிகாரத்தால் தடுக்காதீர்கள்!” என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஒரு கட்சிக்கு, தனது பெரும்பான்மையை நிரூபிக்க உரிய வாய்ப்பளிக்க வேண்டியது ஜனநாயகத்தின் கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இயக்குனர் திருச்செல்வம் தனது பதிவில், “ஜனநாயக மரபுகளைப் பின்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த விஜய்க்குப் பேரவையில் தனது பலத்தை நிரூபிக்க (Floor Test) ஆளுநர் உடனே வாய்ப்பளிக்க வேண்டும். மக்களின் தீர்ப்பை அதிகாரத்தைக் கொண்டு தடுப்பது ஆரோக்கியமான அரசியல் கிடையாது” என்று மிகவும் ஆழமாகப் பதிவு செய்துள்ளார். ஒரு மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் ஒரு புதிய மாற்றத்தை விரும்பியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடுவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பது அவரது வாதமாக உள்ளது.
View this post on Instagram
தற்போது காங்கிரஸ் கட்சி தனது 5 இடங்களின் ஆதரவை விஜய்க்கு வழங்கியுள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக (VCK) ஆகியவற்றுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்று மாலைக்குள் இடதுசாரி கட்சிகள் தங்களது முடிவை அறிவிக்க உள்ள நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகரின் தலைமையில் புதிய அரசு அமையுமா அல்லது ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். இயக்குனர் திருச்செல்வத்தின் இந்தப் பதிவு, விஜய்யின் ஆதரவாளர்களுக்குப் பெரும் தெம்பைக் கொடுத்துள்ளது.













