தமிழில் மாவீரன், நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 படங்களை இயக்கியவர் ராஜமவுலி. தெலுங்கில் இவர் இயக்கும் பிரமாண்ட படங்கள் உடனுக்குடனே மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கும் வந்து விடும்.
சமீபத்தில் இவர் இயக்கி வெற்றி பெற்ற படம் ஆர் ஆர் ஆர்.
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இவர் என்ன படம் இயக்க இருக்கிறார் என தெரியவில்லை.ஆனால் ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் என தகவல் வெளியாகிறது.
ரஜினியின் அடுத்த படமான 170வது படத்தை ராஜமவுலி இயக்க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
இந்த படத்தில் ரஜினிகாந்த் துரோணாச்சாரியாராக நடிக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் கசிகின்றன.
இதெல்லாம் நடந்தா நல்லா இருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.









