---Advertisement---

நிலவை மிக அருகில் புகைப்படம் எடுத்த சந்திராயன் 2…

By Sri
Published on: August 22, 2019
---Advertisement---

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் நிலவை மிகவும் அருகில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

இந்தியாவை பெருமை படுத்தும் வகையில் நமது இஸ்ரோ கடந்த ஜூலை 22ம் தேதி ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த 14ம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவின் பாதையை நோக்கி நேர்க்கோட்டில் பயணிக்க தொடங்கியது.

இந்நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திராயன் விண்கலம் நிலவை மிகவும் அருகில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.