கடலில் குதித்து தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகனுடன் கடைசியாக வீடியோ கால் சாட்டிங் செய்து இருக்கின்றார்.
காட்கோபரில் வசிக்கும் பவேஷ் சேத், பால் பேரிங்ஸ் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று மாலை 3.15 மணியளவில் பாந்த்ரா-ஒர்லியை இணைக்கும் இதையடுத்து மகன் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து பந்தா போலீசார் தெரிவித்ததாவது: “இறந்தவரின் மகன் மாலை 4:30 மணியளவில் எங்களை அணுகினார். வாட்ஸ் அப் வீடியோ காலில் தந்தை அழைத்ததாகவும், அவர் கடலில் குதித்ததையும் தெரிவித்திருந்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட தேடுதலுக்கு பிறகு அவரது உடலை கண்டெடுத்தனர்.
ஒரு வாகனம் ஓட்டியிடம் லிப்ட் கேட்டு பாந்த்ரா பகுதிக்கு வந்த இவர் மகனுக்கு வீடியோ கால் செய்து பாலத்தில் இருந்து குதிக்க போவதாகவும் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் படியும் தெரிவித்து இருக்கின்றார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.







