இந்தியாவில் கொரோனாவால் 144 தடை உத்தரவை அமல்படுத்திய பிறகு மாநில அரசும், மத்திய அரசும் மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்றுதான் ஆகவேண்டும் என்ற நிலைமை உள்ளது. இன்னும் சொல்லப்போனால் அத்தியாவசிய தேவையை தவிர்த்து ஒரு சிலர் மட்டும் வெளியே சுற்றித் திரிவதாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை, காவல்துறையினர் பலர் மக்களிடம் கைகூப்பி வேண்டி வெளியே வர வேண்டாம் என்ற விழிப்புணர்வு வாசகத்தை கூறிக் கொண்டே வருகின்றனர். இன்னும் சில இடங்களில் போலீசார் அத்தியாவசிய தேவை தவிர்த்து வெளியே சுற்றித் திரிபவர்களை அடித்து வருகின்றனர் என்பதை நாம் ஊடகம் மூலம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்.
இந்நிலையில் மலையாள நடிகரான சுரேஷ்கோபி பெரும் சர்ச்சையான எச்சரிக்கையை அறிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மொழிகளில் நடித்து நடிகராகவும், அரசியல்வாதியாகவும், பிரபல தொகுப்பாளராகவும் பன்முக கலைஞராகவும் விளங்கியவர் நடிகர் சுரேஷ் கோபி.
அதன்படி போலீசார் மக்களை அடிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும், உத்தரவுகளை மதிக்காவிட்டால் அடித்துதான் ஆக வேண்டும் என்றும், இல்லை என்றால் ராணுவத்தை வரவழிப்பதை தவிர வேறு வழி இல்லை என்றும், சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பலர் எதிர்ப்பதாகவும், சிலர் ஆதரிப்பதாகவும் அவ்வப்போது சோஷியல் மீடியா மூலமும், ஊடகங்கள் மூலமும் நாம் கேட்டுக் கொண்டுதான் வருகிறோம். ஆனால் நடிகர் சுரேஷ் கோபியின் இந்த கருத்து சிலருக்கு சரி என்று பட்டாலும், பலதரப்பட்ட மக்களுக்கு மைண்ட் வாய்ஸில் “நீங்கள்லாம் நடிகரு வெளிய வந்தா உங்க கூட செல்பி எடுப்பாங்க, ஆனா நாங்க வந்த அடிப்பாங்க” என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில், உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி எங்களுக்கு வந்தா ரத்தமா என்று எரிச்சலாக விமர்சித்து வருகின்றனர்.









