மருதநாயகம் படம் பற்றி 90களில் பத்திரிக்கை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. கமல்ஹாசன் பிரமாண்டாமாக நடிக்கும் படம் என அதிகமான செய்திகள் வந்து கொண்டே இருந்தன. ரசிகர்களும் மருதநாயகம் படம் எப்போது வரும் என மற்ற படத்தின் எதிர்பார்ப்பை விட இப்படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகம் வைத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் மருதநாயகம் படத்தின் பூஜையை தொடங்கினார் கமல். அதுவும் சாதாரணமாக அல்ல. இங்கிலாந்து ராணி எலிசபெத்தை வைத்து இந்த படத்தின் தொடக்க விழாவை நடத்தினார் கமல். அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியும் இவ்விழாவில் கலந்து கொண்டார். சென்னை டிரேட் சென் டரில் இவ்விழா நடந்தது.சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த இவ்விழாவிற்கு பின் மருதநாயகம் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட ஷூட்டிங்கும் தொடங்கியது. காரைக்குடி பகுதிகளில் ஆரம்ப காட்சிகள் சில படமாக்கப்பட்ட நிலையில் சில நிமிடங்கள் வரக்கூடிய காட்சிகளுக்கே பல கோடி செலவானதால் அப்படத்தை முழுவதும் எடுத்து முடிப்பது கடினம் என படத்தை ட்ராப் செய்தார் கமல்.
இன்று 13 அக்டோபர் மருதநாயகம் படத்தின் பூஜை போடப்பட்ட நாள். இன்றோடு 23 ஆண்டுகள் ஆனாலும் படம் துவங்கப்படாதது ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.







