தமிழ்சினிமாவின் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். எஸ்.பி.பி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனா தொற்று சரியான நிலையில் நுரையீரல் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 25ல் காலமானார்.
ஆந்திராவில் பிறந்து பாடல் உலகில் பல சாதனைகளை செய்ததால் இவருக்கு பாரத ரத்னாவை மத்திய அரசு வழங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கோரிக்கையும் விடுத்திருந்தார்.
இந்தக் கடிதத்திற்காக ஆந்திர முதல்வருக்குக் கமல் நன்றி தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வரின் கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கமல் கூறியிருப்பதாவது:
“ஆந்திர முதல்வருக்கு நன்றி. எங்கள் சகோதரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நீங்கள் அளித்திருக்கும் கவுரவம், தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள அவரது குரலின் உண்மையான ரசிகர்களின் உணர்வை எதிரொலிக்கிறது”.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்







