அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று நாடாளுமன்றத்தில் பாஜகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
அதிமுகவும், பாஜகவும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிகிறது. ஆனால், துணை சபாநாயகர் தம்பிதுரை கடந்த சில நாட்களாகவே நாடாளுமன்றத்தில் பாஜகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இன்றும் அவர் பேசியது அனல் பறந்தது.
பாஜக மிகவும் மோசமாக தோற்றுவிட்டது. ஜி.எஸ்.டி மூலம் மாநில உரிமைகளை பறிக்க முயல்கிறது. பணமதிப்பிழப்பு அறிவிப்பால் சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி ஒன்றை கூட இதுவரை பாஜக நிறைவேற்றவில்லை என கடுமையாக தாக்கி பேசினார்.













